உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
*************
என் முக கண்ணைவிட ..
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் மறைந்தாலும் ...!!!
காதல் கற்பூரம் போன்றது ...
பிரகாசமாக எரியும் ...
விரைவில் அழிந்துவிடும் ...!!!
************
நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே உன் நிழலையே ..
காதலித்தேன் ...!!!
காதல் கண்ணுக்கு தெரியாது ..
கண் பார்க்கமல் வராது ...!!!
காதல் வலிக்காமல் இனிக்காது ...!!!
கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காற்றில் அல்ல ...!!!
************
காதலில் தற்கொலை...
முட்டாள்களின் முடிவு ...
தற்கொலை செய்தவுடன் ..
அவர்கள் காதல் அழிவதில்லை ,....
அவர்கள் தான் அழிகிறார்கள் ...!!!
காலையில் இளம் ..
சூரியன் நீ ..
ஏன் இப்படி ...
சுட்டெரிக்கிறாய் ....?
நீ நிலவும் ...
சூரினனாகவும் ..
இருந்தால் ...
வானத்தில் எனக்கு ...
என்ன வேலை ...?
************
மெழுகு திரியாய் ..
உருகுகிறேன் ..
நீ
விட்டில் பூச்சியாக கூட ..
மாறவில்லை ....!!!
வா இருவரும் ..
ஆகாய முகிலுக்குள்
முத்தமிடுவோம் ...!!!
நீ அழுவது ..
வைரக்கல் ..
நான் அழுவது ..
மாணிக்கக்கல் ....!!!
****************
காதலின் தேசிய பாடல்
காதல் தோல்வி பாடல்
நீ அதை தானே
விரும்புகிறாய் .......!!!
வறண்டு இருக்கும்
காதல் குளத்தில்
உயிர் வாழ துடிக்கும்
மீன் நான் ...!!!
உன்னை பாராட்டுகிறேன்
இல்லாவிட்டால் என்னை
யாருக்கு தெரிந்திருக்கும்
கவிதை தந்தாயே ....!!!
******************
நான்....
காற்றில் ஆடும் பட்டம்.....
உன் கையில் நூல்....
என்ன வேண்டும் என்றாலும்.....
நீ தான் முடிவெடு.......!!!
காட்டுக்குள்....
தனியாக கண்ணை கட்டி ....
விட்டவனைபோல்....
உன்னை பிரிந்த பின் .....
நிற்கிறேன்......
நீ தான் காப்பாற்ற வேண்டும்.....!!!
உன்னோடு அலைந்த நாட்கள்....
மண்ணோடு மறையும் வரை....
தந்தவள் நீ.............!!!
முள்ளில் மலரும் பூக்கள்
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
1044
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
********
நீயே ...
காதல் நாயகியாகவும் ..
இருக்கிறாய் ..
காதல் வில்லியாகவும் ..
இருக்கிறாய் ...!!!
நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம் ..
உன்னைத்தான் ...!!!
தயவு செய்து ..
என்னிடம் இருந்து ...
விலகிவிடு ...
என் இதயம் வலியால்..
துடிக்கிறது ....!!!
**********
நான்....நீ...!!!
நீயார் ...?
நீ ...நான் .....!!!
நான் யார் ...?
காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!
என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன் ....!!!
**********
இன்று காதல் பரீட்சை ...
எழுதினேன் ...
விடையும் நீ ...
வினாவும் நீ ...
நான் கண்ட பூக்களில் ..
அடிக்கடி மலரும் பூ ...
உன் சிரிப்பு ...!!!
வருமானம் இல்லாதவன் ..
வீட்டில் அடுப்பு எரியாதது போல் ..
நீ இல்லாத இதயத்தில் ...
நினைவுகள் -இல்லை
************
காதலும் நீ
காதலியும் நீ
என்றுதானே இருந்தாய் ...!!!
எப்போதென்ன என்னிடம் ..
காதல் மட்டும் இருக்கிறது ....???
கண்ணுக்குள்....
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!
நான் வடக்கு திசை ..
நீ தெற்கு திசை ...
எப்படி இணைவது ...???
*********
யார் யாருக்கு என்று
மனமே முடிவு செய்யும்
நீ ஏன் முடிவு செய்தாய் ...?
காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?
நான் இறுதியாக
சிரித்தது -உன்
காதலுக்கு முன் .....!!!
***********************